மகாகவி காளிதாஸ் எழுதி உலகப்புகழ் பெற்ற ‘அபிஞான சாகுந்தலம்’ என்ற சமஸ்கிருத நாடகத்தை தழுவி உருவாக்கப்படும் படம், ‘சாகுந்தலம்’. இது தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில், வரும் டிசம்பர் 4ம் தேதி திரைக்கு வரும் என்று ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. காரணம், இப்படத்தை முழுமையாக 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கி முடித்த பிறகே ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.