போபால்: பிரதமர் மோடி பெயர் சூட்டிய பெண் சிவிங்கிப் புலி ஆஷா கர்ப்பமாக இருப்பதற்கான அடையாளங்கள் தென்படுவதாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் 70 ஆண்டுகளுக்கு முன் சிவிங்கிப் புலி விலங்குகள் இனம் அழிந்து போயின. அவற்றை மீண்டும் கொண்டுவரும் நடவடிக்கையாக ஆப்ரிக்காவிலிருந்து 5 பெண் மற்றும் 3 பெண் சிவிங்கிப் புலிகள் இந்தியா கொண்டு வரப்பட்டன. அவற்றை மத்தியப்பிரதேச மாநிலம் சியோபூரில் உள்ள குனோ உயிரியல் பூங்காவில் கடந்த மாதம் 17ம் தேதி பிரதமர் மோடி கூண்டிலிருந்து விடுவித்தார். இவற்றில் பெண் சிவிங்கி புலி ஒன்றுக்கு ‘ஆஷா’ என பெயர் சூட்டிய பிரதமர் மோடி, மற்ற சிவிங்கிப் புலிகளுக்கும் இந்திய பெயர்களை பரிந்துரைக்குமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், மோடி பெயர் சூட்டிய ஆஷா கர்ப்பமாக இருப்பதாக குனோ உயிரியில் பூங்கா அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.