ஷிவமொக்கா: திருமண வீட்டில் இருந்த நாகபாம்பை பிடித்து முத்தமிட முயன்றவருக்கு, பாம்பு ‘மவுத் கிஸ்’ கொடுத்தது. கர்நாடகா மாநிலம், ஷிவமொக்கா மாவட்டம், பத்ராவதியை சேர்ந்தவர்கள் அலெக்ஸ், ரோனி. இவர்கள், பொதுமக்களை அச்சுறுத்தும் பாம்புகளை பிடித்து, காடுகளில் விட்டு வருகின்றனர். இந்நிலையில், பொம்மனக்கட்டில் உள்ள ஒரு திருமண வீட்டில் 2 நாக பாம்புகள் இருந்தன. இதை பார்த்த மக்கள், அலெக்ஸ், ரோனிக்கு தகவல் கொடுத்தனர். 2 பேரும் அங்கு சென்று பாம்புகளை மீட்டனர். அதில், ஒரு பாம்புக்கு காயம் ஏற்பட்டு இருந்தது. அதை மீட்ட அலெக்ஸ், அதை வைத்து மக்களுக்கு வித்தை காட்டினார்.