சண்டிகர்: பஞ்சாபிலுள்ள பொற்கோயிலுக்கு குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன். புஷ்பா படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு புஷ்பா 2வில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். இதன் படப்பிடிப்பை அவர் தொடங்கிவிட்டார். தற்போது மற்ற நடிகர்கள் நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதையடுத்து பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு செல்ல அல்லு அர்ஜுன் திட்டமிட்டார். அதன்படி குடும்பத்தினருடன் அவர் இந்த கோயிலுக்கு நேற்று முன்தினம் சென்றார். மனைவி சினேகா ரெட்டி, மகன் அயான், மகள் அர்ஹா ஆகியோருடன் அல்லு அர்ஜுன் கோயிலுக்கு வந்திருந்தார்.