காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் ஆம்புலன்ஸ் ஒன்றில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 25 கோடி ரூபாய் நோட்டுகள் போலியானவை என தெரியவந்துள்ளது. உளவு தகவல் அடிப்படையில், சூரத்தில் காம்ரிச் நகர் காவல்துறையினர் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அகமதாபாத் - மும்பை சாலையில் நோயாளியின்றி வேகமாக வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறைத்து சோதனை செய்தனர். அப்போது 2 பெட்டிகள் முழுவதுமாக 2 ஆயிரம் ரூபாய் கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 1290 இரண்டாயிரம் ரூபாய் நோட்டு கட்டுகள் காவல்துறையிடம் சிக்கின.