தலைமறைவு ரவுடி கைது

பெரம்பூர்: எம்கேபி நகர் பகுதியில் 7 வருடங்களாக தலைமறைவாக இருந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர். அரும்பாக்கம் ஆசாத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (எ) கவுரி சங்கர் (47). இவர் மீது எம்கேபி நகர் வியாசர்பாடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. மேலும் எம்கேபி நகர் காவல் நிலையத்தில கடந்த 2001ம் ஆண்டு ஆரோக்கியதாஸ் என்பவரை கொலை செய்த வழக்கும் உள்ளது. எம்கேபி நகர் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் சில வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடர்ந்து கடந்த 7 வருடங்களாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இந்நிலையில், கவுரிசங்கர் அரும்பாக்கம் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருவதாக எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று எம்கேபி நகர் போலீசார் அரும்பாக்கத்தில் வைத்து கவுரிசங்கரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கவுரிசங்கர் மீது வழக்கு பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: