புதுடெல்லி: பழம்பெரும் பாலிவுட் நடிகை ஆஷா பரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. சத்யஜித் ரே, திலீப்குமார், லதா மங்கேஷ்கர், ஷியாம் பெனகல், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகிலிருந்து சிவாஜி கணேசன், கே.பாலசந்தர், ரஜினிகாந்த் ஆகிய மூவர் இந்த விருதினைப் பெற்றுள்ளார்கள். 2019-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்த்துக்கு அறிவிக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த விழா நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு நடந்த விழாவில் ரஜினிக்கு பால்கே விருது வழங்கப்பட்டது.