போபால்: மத்திய பிரதேச பள்ளியில் 5ம் வகுப்பு மாணவியின் அழுக்கான உடையை கழற்றி துவைத்து கொடுத்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம், ஷாதோல் மாவட்டத்தின் பாரா காலா என்ற இடத்தில் அரசு தொடக்க பள்ளி உள்ளது. பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடத்தப்படும் இப்பள்ளியில், 5ம் வகுப்பில் படித்து வரும் ஒரு மாணவி, அழுக்கான சீருடையை அணிந்து வந்துள்ளார். அதை பார்த்த சிராவன் குமார் திரிபாதி என்ற ஆசிரியர், மற்ற மாணவிகளின் முன்னிலையில் அழுக்கு சீருடையை கழற்ற வைத்தார். பின்னர், தானே அதை துவைத்து கொடுத்தார். துணி காயும் வரை அந்த மாணவி 2 மணி நேரம் உள்ளாடைகளுடன் நின்றுள்ளார்.