திருவனந்தபுரம்: கேரளாவில் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஆரியாடன் முகம்மது. ஏ.கே.அந்தோணி, உம்மன்சாண்டி அமைச்சரவைகளில் தொழில், வருவாய், மின்சாரத் துறை அமைச்சராக இருந்தார். 1980ல் தன்னுடைய ஆதரவாளர்களுடன் இடது முன்னணியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு வனம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 2001, 2005ல் உம்மன்சாண்டி அமைச்சரவையில் மின்சாரத் துறை அமைச்சராக இருந்தார். 1977ல் முதன் முதலாக இவர் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார்.