கேரளாவில் காங். மூத்த தலைவர் ஆரியாடன் மரணம்

திருவனந்தபுரம்: கேரளாவில் மூத்த காங்கிரஸ் தலைவர்களில்  ஒருவராக இருந்தவர் ஆரியாடன் முகம்மது. ஏ.கே.அந்தோணி, உம்மன்சாண்டி அமைச்சரவைகளில் தொழில், வருவாய், மின்சாரத் துறை அமைச்சராக  இருந்தார். 1980ல் தன்னுடைய ஆதரவாளர்களுடன் இடது முன்னணியில் சேர்ந்தார்.  அப்போது அவருக்கு வனம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.  2001, 2005ல் உம்மன்சாண்டி அமைச்சரவையில் மின்சாரத் துறை அமைச்சராக  இருந்தார். 1977ல் முதன் முதலாக இவர் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர்  தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார்.

அடுத்த தேர்தலில் தோற்ற போதிலும், 1987 முதல் 2011 வரை அனைத்து  தேர்தலிலும் வெற்றி பெற்றார். உடல்நலக் குறைவு காரணமாக  கடந்த வாரம் கோழிக்கோட்டில் உள்ள தனியார்  மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். கேரளாவில் நடை பயணம் செய்து வரும் ராகுல் காந்தி, ஆரியாடன் வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

Related Stories: