தூத்துக்குடி,: காயல்பட்டினத்தில் அமமுக நிர்வாகியை அடித்துக் கொலை ெசய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தை சேர்ந்தவர் நைனா முகமது (56). அமமுக வெளிநாடு வாழ் தமிழர் நலப் பிரிவின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார். கடந்த 19ம் தேதி காலை இவரது தாயார் வீட்டை அப்பகுதியை சேர்ந்த அபுல்ஹசன் மகன் நவ்பள் (26) என்பவர் உடைத்து சேதப்படுத்தினாராம். தகவலறிந்து சென்ற நைனா முகமது இதைத் தட்டிக்கேட்டபோது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நவ்பள், நைனா முகமதுவை சரமாரியாக தாக்கியதோடு கீழே தள்ளி மிதித்தாராம்.