காயல்பட்டினத்தில் அமமுக நிர்வாகி அடித்து கொலை வாலிபருக்கு வலைவீச்சு

தூத்துக்குடி,: காயல்பட்டினத்தில் அமமுக நிர்வாகியை அடித்துக் கொலை ெசய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தை சேர்ந்தவர் நைனா முகமது (56). அமமுக வெளிநாடு வாழ் தமிழர் நலப் பிரிவின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார். கடந்த 19ம் தேதி காலை  இவரது தாயார் வீட்டை அப்பகுதியை சேர்ந்த அபுல்ஹசன் மகன் நவ்பள் (26) என்பவர்  உடைத்து சேதப்படுத்தினாராம். தகவலறிந்து  சென்ற நைனா முகமது இதைத் தட்டிக்கேட்டபோது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நவ்பள், நைனா முகமதுவை சரமாரியாக தாக்கியதோடு கீழே தள்ளி மிதித்தாராம்.

இதில் பலத்த காயமடைந்து மாரடைப்புக்கு ஆளான நைனா முகமதுவை உறவினர்கள் மீட்டு காயல்பட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப் பதிந்து நவ்பளை கைது செய்தனர். பின்னர் நவ்பள்,  ஜாமீனில் வெளிவந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  நைனா முகமது, நேற்று காலை உயிரிழந்தார். போலீசார் நவ்பளை தேடி வருகின்றனர்.

Related Stories: