வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கான்சாபுரத்தை அடுத்த அத்திகோயில் செம்பட்டையான் காலனியை சேர்ந்தவர் கார்த்திக் (22). அய்யனார்புரத்தை சேர்ந்தவர்கள் டேனியல் ராஜ்குமார் (22), தேவாஜ் (25). இவர்கள் மூவரும் கான்சாபுரம் மலையடிவாரத்தில் உள்ள தோட்டத்தில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கிவைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கூமாப்பட்டி போலீசார் சென்று சோதனை நடத்தினர். அங்கு பதுக்கிவைக்கப்பட்டு இருந்த 5 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.