புழல்: செங்குன்றம் பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட், நெல் அரிசி மண்டி, திருவள்ளூர் கூட்டு சாலை, செங்குன்றம், சோத்துப்பாக்கம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் செல்போன் பறிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து பல்வேறு புகார்கள் செங்குன்றம் காவல் நிலையத்தில் செய்யப்பட்டது. இந்நிலையில் செங்குன்றம் போலீசார் நேற்றுமுன்தினம் செங்குன்றம் பேருந்து நிலையத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.