திருமலை: ஆந்திரா - ஒடிசா மாநில எல்லையில் போலீசாரை கொல்வதற்காக சாலையின் நடுவே நக்சலைட்கள் டிபன்பாக்ஸ் கண்ணிவெடி புதைத்து வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. ஆந்திரா - ஒடிசா மாநில எல்லையில் உள்ள கிராமங்கள், வனப்பகுதிகளில் நக்சலைட்கள் நடமாட்டம் உள்ளது. இதனால், இரு மாநில போலீசாரும் இப்பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து ஒடிசா மாநிலம், கோராபுட் மாவட்ட எஸ்பி வருண் குண்டுபள்ளி கூறியதாவது: ஆந்திரா - ஒடிசா போலீசார் எல்லையில் உள்ள கிராமங்களில் இன்று அதிகாலை (நேற்று) சோதனை நடத்தினர். இதில், ஆந்திரா - ஒடிசாஎல்லையில் உள்ள சிந்திபுட் கிராமத்தில் நக்சல்களின் ஆயுத கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டது.