அம்பை : மாஞ்சோலையில் பட்டபகலில் மிளாவின் நடமாட்டத்தால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். நெல்லை மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் மாஞ்சோலை அமைத்துள்ளது. இங்குள்ள நாலுமுக்கு பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் சமீபகாலமாக மிளாக்கள் சுற்றி திரிந்து வருகிறது.
பொதுவாக இரவு நேரங்களில் இப்பகுதியில் வனவிலங்குகள் நடமாடுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.