அதன்படி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, தென்காசி, நெல்லையில் ஆகிய 8 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளதால், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் கேரள பகுதிகளில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, தேனி, திருப்பூர், கோவையில் மிக கனமழையும், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, தஞ்சை, நாகை, சேலம், கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் தேனி, தென்காசி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.