வதோதரா: குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள மத்திய சிறையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 7 விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குஜராத் தீவிரவாத கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் விசாரணையை சந்தித்து வருவதால், வீட்டு உணவு சாப்பிடுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், இவர்கள் சிறையில் உள்ள மற்ற விசாரணை கைதிகளின் உணவை எடுத்துக்கொண்டு அவர்களை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதாக தெரிகிறது.