சஹாரன்பூர்: உத்தரப்பிரதேசத்தில் கழிவறையில் வைத்து உணவை கபடி வீரர்கள் வழங்கிய மாவட்ட விளையாட்டு அதிகாரி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் ஸ்டேடியத்தில் மாநில அளவிலான சப்-ஜூனியர் பெண்கள் கபடி போட்டி கடந்த 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடந்தது. இந்த போட்டியில் 300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்காக தயாரிக்கப்பட்ட சாதம் மற்றும் பூரி ஆகியவற்றை கழிவறைக்குள் வைத்து வீரர்களுக்கு வழங்கப்பட்டது.