பெங்களூரு: இலங்கை தமிழர்கள் 38 பேர் கடந்த 2021ம் ஆண்டு தமிழகம் வழியாக கர்நாடக மாநிலம், மங்களூரு மாநகருக்கு வந்து, அங்கிருந்து கள்ளப் படகு மூலமாக வெளிநாடு தப்ப முயன்றனர். அப்போது போலீசிடம் சிக்கிய அவர்கள், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை அகதிகள் முகாமுக்கு மாற்று கோரி தேசிய பாதுகாப்பு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.