பெங்களூரு சிறையில் இருந்த இலங்கை தமிழர்கள் முகாமுக்கு மாற்றம்

பெங்களூரு:  இலங்கை  தமிழர்கள் 38 பேர் கடந்த 2021ம் ஆண்டு தமிழகம் வழியாக கர்நாடக மாநிலம்,  மங்களூரு மாநகருக்கு வந்து, அங்கிருந்து கள்ளப் படகு மூலமாக வெளிநாடு தப்ப முயன்றனர். அப்போது போலீசிடம் சிக்கிய அவர்கள்,  பெங்களூரு  பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை அகதிகள் முகாமுக்கு மாற்று கோரி தேசிய பாதுகாப்பு முகமை சிறப்பு  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிபதி  கங்காதரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, உடனடியாக அனைவரையும்  அகதிகள் முகாமுக்கு மாற்றும்படி உத்தரவிட்டார். அப்போது, அரசு  சார்பில் ஆஜரான வக்கீல், இன்று (நேற்று முன்தினம்) 10 நபர்களை மட்டும்  மாற்றுவதாகவும், மற்றவர்களை விரைவில் முகாமுக்கு மாற்றுவதாகவும் தெரிவித்தார். அதன்படி, 10 பேர் நேற்று முகாமுக்கு மாற்றப்பட்டனர்.

Related Stories: