திருமலை: திருப்பதியில் வரும் 27ம் தேதி பிரமோற்சவம் நடைபெற உள்ளதையொட்டி, அன்னப்பிரசாதம் வழங்குவதாக கூறி நன்கொடை சேகரிக்கும் அறக்கட்டளையை நம்ப வேண்டாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 27ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை நடைபெறும் பிரமோற்சவத்தில் பக்தர்களுக்கு இலவசமாக அன்னப்பிரசாதம் வழங்க உள்ளது. அன்னதானம் என்ற பெயரில் நன்கொடை கேட்கும் தனியார் அமைப்புகள், அறக்கட்டளைகள், தனிநபர்களுக்கு நன்கொடை அளிக்க வேண்டாம்.