ஹோவ்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்த டி.20 தொடரை 2-1 என இங்கிலாந்து கைப்பற்றிய நிலையில், 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் முதல்ஆட்டம் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 227 ரன் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில், ஸ்மிருதி மந்தனா, 99 பந்தில், 10 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 91ரன் எடுத்து கேட்ச் ஆனார். 44.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 232ரன் எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.