திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து, அக்டோபர் 5ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்வம் நிறைவு பெறுகிறது. இதனையொட்டி ஆலயத்தில் சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் 20ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதனால்ல, அன்றைய தினம் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதால் 19ம் தேதி எந்தவித முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்களும் பெறுவதில்லை என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு 4 முறை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம்.