டெல்லி : சுகேஷ் சந்திரசேகர் 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜர் ஆனார். தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் 200 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக விசாரணை தீவிரமடைந்து வருகிறது. இதுகுறித்து டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே நடிகை நோரா ஃபதேஹியிடம் விசாரணை நடத்தினர். இவ்வழக்கு தொடர்பாக அமலாக்க துறையின் துணை குற்றப் பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் சுகேஷிடம் பல கோடி ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்கள் வாங்கியதும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.