கொள்ளையர்கள் தலைவன் நான்: பீகார் அமைச்சர் சர்ச்சை

பாட்னா:  பீகார் மாநிலம், கைமூர் மாவட்டத்தில் விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், இம்மாநில வேளாண் துறை அமைச்சர் சுதாகர் சிங் கலந்து கொண்டார். விவசாயிகளிடையே பேசிய அவர், ‘‘நான் இருக்கும் வேளாண் துறையில் கொள்ளையில் ஈடுபடாத பிரிவு என்று ஒன்று கூட இல்லை. நான் இந்த துறையின் அமைச்சர் என்பதால், இந்த கொள்ளையர்களுக்கு எல்லாம் நானே தலைவன் ஆகிறேன். அரசை எச்சரிக்க வேண்டியது மக்களின் கடமை. விதைக்கழகம் சார்பில் ரூ.200 கோடி ஊழல் நடந்துள்ளது. ஊழலை எதிர்த்து குரல் கொடுப்பேன். மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன்’ என்றார்.

Related Stories: