இலங்கை கடற்படை கைது செய்த 6 மீனவர்கள் விடுதலை

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த ஆக. 28ம் தேதி கடலுக்குச் சென்ற மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், 6 மீனவர்களையும் கைது செய்து ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். கைதான மீனவர்கள் தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

 இதற்கிடையே இலங்கை சிறையிலுள்ள மீனவர்கள் மற்றும் படகை மீட்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறைக்காவல் முடிந்த நிலையில் நேற்று மீண்டும் மீனவர்கள் தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடத்திய நீதிமன்ற நீதிபதி, 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தார்.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் சில தினங்களில் ராமேஸ்வரம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: