மெல்போர்ன் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனான ஆரோன் பிஞ்ச் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சமீப காலமாக பேட்டிங்கில் சொதப்பி வருகிறார் பிஞ்ச். இவரின் தலைமையில் ஆஸ்திரேலிய அணி வெற்றிகளை குவித்த போதும், பிஞ்ச்சால் பெரியளவில் சோபிக்க முடியவில்லை. இந்த நிலையில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆரோன் பிஞ்ச் அறிவித்துள்ளார். நாளை நடைபெற உள்ள நியூசிலாந்து அணியுடனான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியுடன் ஆரோன் பிஞ்ச் ஓய்வு பெறவுள்ளார்.