இத்தாலியன் ஓபன் 3வது சுற்றில் சோபியா

ரோம்: இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் தகுதி பெற்றார். 2வது சுற்றில் துனிசியா நட்சத்திரம் ஆன்ஸ் ஜெபருடன் (29 வயது, 9வது ரேங்க்) நேற்று மோதிய சோபியா கெனின் (25 வயது, 42வது ரேங்க்) 7-5, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 17 நிமிடத்துக்கு நீடித்தது. முன்னணி வீராங்கனைகள் யெலனா ஆஸ்டபென்கோ (லாத்வியா), எலிஸ் மெர்டென்ஸ் (பெல்ஜியம்), சோரிபிஸ் டோர்மோ (ஸ்பெயின்), மரியா சாக்கரி (கிரீஸ்), டேனியலி கோலின்ஸ் (அமெரிக்கா), அன்னா கலின்ஸ்கயா (ரஷ்யா) ஆகியோரும் 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

The post இத்தாலியன் ஓபன் 3வது சுற்றில் சோபியா appeared first on Dinakaran.

Related Stories: