பெரம்பூர்: கொடுங்கையூர் எருக்கஞ்சேரி கைலாசம் தெருவை சேர்ந்தவர் தாரணி (24). அப்பகுதியில் தாதாவாக வலம் வந்த இவர் கொடுங்கையூர் பகுதியில் தனியாக வீடு எடுத்து, ஆட்களை வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தார். பலமுறை கஞ்சா விற்ற வழக்கில் இவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் இவரது வீட்டில் சோதனை செய்தபோது, 14 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தது. அவற்றை கைப்பற்றி, தாரணியை கைது செய்தனர். தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் சென்னை மாநகர கமிஷனர் சங்கர் ஜீவாலுக்கு பரிந்துரை செய்திருந்தார்.