உடல் நலக்குறைவால் டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதி: ஓரிரு நாட்களில் வீடு திருப்பலாம் என ட்வீட்

தஞ்சை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்  உடல் நலக்குறைவால் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நிர்வாகிகளை சந்திக்கவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும் தஞ்சைக்கு வந்திருந்தார். நேற்றிரவு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உணவு உட்கொண்டதில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்:- சிறிய உடல்நலக் குறைவு (உணவு ஒவ்வாமை) காரணமாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். எனவே, கழக உடன்பிறப்புகள் யாரும் கவலைப்பட வேண்டாம். நேரில் பார்க்க வருவதையும் தவிர்க்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டிருந்தார்.

டிடிவி. தினகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அமமுக தொண்டர்களிடையே மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நாளை திருச்சியில் அமமுக கட்சியின் சார்பில் திருச்சியில் மாவட்ட அளவில் கூட்டம் நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: