சென்னை: முதல்வரின் ‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகளைப் பறைசாற்றி செப்டம்பர் மாதத்தை திராவிட மாதமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ.அறிவித்துள்ளார்.
திமுகவின் தகவல் ெதாழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் கூட்டம் சென்னை அன்பகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். கூட்டத்தில் செப்டம்பர் மாதம் திராவிட மாதமாக கொண்டாடுப்படும். பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்தநாள், திமுகவின் தொடக்க நாள் ஆகிய முப்பெரும் விழா செப்டம்பர் மாதத்தில் இடம் பெறுவதால், அதனை திராவிட மாதமாக முன்னெடுத்து, இன்றைய தலைமுறையினருக்கு திராவிட இயக்கத்தின் கொள்ைககளையும், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளையும், திராவிட இயக்க தலைவர்களின் தியாக உணர்வு மிக்க போராட்டங்களையும் கொண்டு சேர்ப்பது என்பதே இதன் நோக்கமாகும். நாள்தோறும் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சமூக வலைத்தளப் பக்கங்களில் திராவிடம் குறித்த சிறுபதிவுகள், காணொலிகள், விரிவான கட்டுரைகள் ஆகியவை வெளியிடப்படும்.