டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் 27வது உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மின்டன் போட்டி நடக்கிறது. அங்கு நேற்று காலிறுதிக்கு முந்தைய 3 வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. இந்திய வீராங்னை சாய்னா நெஹ்வால் 3வது சுற்றில் நேற்று தாய்லாந்து வீராங்கனை புசனன் ஓங்க்பாம்ருங்பன் உடன் மோதினார். அதில் புசனனிடம் 17-21, 21-16, 13-21 என்ற செட்களில் போராடி தோல்வியை சந்தித்தார். ஆடவர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் இந்திய வீரர்கள் எச்.எஸ்.பிரணாய்-லக்ஷயா சென் ஆகியோர் நேருக்கு நேர் களம் கண்டனர். அதில் பிரணாய் 17-21, 21-16, 21-17 என்ற செட்களில் போராடி சென்னை வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.