கோவை: கோவை ஈச்சனாரியில் இன்று நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்காக, அங்கு அமைக்கப்பட்டு வரும் மேடை, பந்தல் பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: மின்சார துறையில் ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் வட்டி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிலைகளால் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழக மக்களிடம் மின்சார ஆணைய ஒழுங்கு முறை ஆணையம் கருத்து கேட்டு வருகிறது. இதுவரை கோவை, மதுரை, சென்னையில் மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அப்போது பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.