கொழும்பு: தாய்லாந்தில் உள்ள கோத்தபய ராஜபக்சே இலங்கைக்கு திரும்பி வருவதற்கான உதவிகளை செய்யும்படி அதிபர் ரணிலிடம் ஆளும்கட்சி அழுத்தம் கொடுத்துள்ளது. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடி சிக்கி தவித்ததால், அதிபர் பதவியில் இருந்து விலகக் கோரி மக்கள் நடத்திய போராட்டதால் கோத்தபய ராஜபக்சே கடந்த மாதம் நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு சென்றார். அங்கும் எதிர்ப்பு வலுத்ததால், சிங்கப்பூர் சென்று தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். சிங்கப்பூரிலும் 30 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி மறுக்கப்பட்டதால், தாய்லாந்து சென்றார். தற்போது, பாங்காக்கில் உள்ள ஓட்டலில் தங்கியுள்ளார். நவம்பர் வரையில் இங்கு அவர் தங்க திட்டமிட்ட நிலையில், வரும் 25ம் தேதி இலங்கை திரும்புவார் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அவர் நாடு திரும்புவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி, அதிபர் ரணிலை சந்தித்து ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைவர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர்.