அவுரங்காபாத்: மகாராஷ்டிராவில் திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்திய காதலியின் கழுத்தை நெரித்து கொன்ற பத்திரிகையாளர், அவரது உடலை துண்டு துண்டாக வெட்டிய சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் ஷியூரைச் சேர்ந்த பகுதிநேர நிருபர் சவுரப் லகே (35). இவருக்கும் திருமணமாகி மூன்று வயதில் ஒரு குழந்தை உள்ள பெண்ணுக்கும் (24) இடையே கள்ளக்காதல் இருந்தது. தனது கணவரிடம் இருந்து பிரிந்த அந்தப் பெண், ஹட்கோ பகுதி வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் தனது கள்ளக்காதலியை பார்க்க சவுரப் லகே அடிக்கடி வந்து சென்றார். இருவரும் நெருக்கமாக பல மாதங்கள் இருந்த நிலையில், அந்தப் பெண் சவுரப் லகேவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார். ஆனால் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்த சவுரப் லகே, அடிக்கடி வந்து செல்வதை மட்டும் விடவில்லை.