சண்டிகர்: பஞ்சாப்பில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது விவசாயிகளுக்கு பயிர் கழிவுகளை அகற்றும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில், 11 ஆயிரம் இயந்திரங்கள் மாயமாகி உள்ளது. இந்நிலையில், தற்போதைய வேளாண் அமைச்சர் குல்தீப் சிங் தாலிவால் நேற்று கூறுகையில், ‘கடந்த 2018-19ம் ஆண்டு முதல் 2021-22ம் ஆண்டு வரையில், விவசாயிகளுக்கு மொத்தம் 90,422 இயந்திரங்கள் மானியத்தில் வழங்கப்பட்டன. இதில் ரூ.150 கோடி மோசடி நடந்துள்ளது. இந்த விசாரணையில் 11,275 இயந்திரங்கள் பயனாளிகளிடம் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பற்றி விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,’’என்றார்.