அம்பத்தூர்: வில்லிவாக்கம் பாலியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (36). பெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவர், நேற்று அதிகாலை 5 மணிக்கு வேலைக்கு செல்வதற்காக வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். அப்போது, அவரை வழிமறித்த 2 பேர், அவரிடம் இருந்த செல்போனை பறிக்க முயன்றனர்.