அகமதாபாத்: குஜராத்தில் ரகசிய தகவலின் அடிப்படையில் வதோதரா நகருக்கு அருகே கட்டப்பட்டு வரும் தொழிற்சாலை மற்றும் கிடங்கு ஒன்றில் கடந்த செவ்வாயன்று தீவிரவாத தடுப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 225 கிலோ எடையுள்ள மெப்ட்ரோன் எனப்படும் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1125 கோடியாகும்.