ரூ.5000 லஞ்சம் கூட்டுறவு சங்க ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பாண்டியம்பாளையம் அடுத்த புதுகுமாரபாளையத்தை சேர்ந்தவர் சம்பத்குமார் (34). விவசாயி. இவர் அவரது மனைவி மகேஸ்வரி பெயரில், பயிர்க்கடன் பெறுவதற்காக கடந்த 2011ல் பாண்டியம்பாளையம் நல்லாம்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் விண்ணப்பித்தார். இந்த சங்கத்தில் ஊழியராக (கிளார்க்) இருந்த ரமேஷ் (50), அவரிடம் பயிர்க்கடனுக்கு பரிந்துரைக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை ஈரோடு தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணன் விசாரித்து, ரமேசுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

Related Stories: