ராஜஸ்தான்: ராஜஸ்தான், ஒடிசா மற்றும் காஸ்மீரில் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒருசில மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு வங்க கடலில் உருவாகியுள்ள மற்றோரு காற்றழுத்த தாழ்வு நிலையால் ஒடிசாவில் பல மாவட்டங்களில் 4 நாட்களுக்கு தொடர் மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள தேவி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டதால் அங்கு மணல் மூட்டைகள் வைத்து வெள்ள நீர் கசிவு அடைக்கப்பட்டது. குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.