அகமதாபாத்: பாகிஸ்தான் சுதந்திர தினத்தையொட்டி, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள சர்வதேச எல்லையில் உள்ள அந்நாட்டு வீரர்களுக்கு இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் வாழ்த்து தெரிவித்தனர். பாகிஸ்தான் தனது 76வது சுதந்திர தினத்தை நேற்று கொண்டாடியது. இதை முன்னிட்டு, குஜராத்தின் கட்ச், பனஸ்கந்தா மற்றும் ராஜஸ்தானின் பார்மர் மாவட்டங்களில் உள்ள சர்வதேச எல்லையில் பணியாற்றும் இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து இனிப்புகளை பரிமாறி கொண்டனர்.