சுதந்திர தினத்துக்கு வாழ்த்து பாக். வீரர்களுக்கு இந்தியா இனிப்பு

அகமதாபாத்: பாகிஸ்தான் சுதந்திர தினத்தையொட்டி, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள சர்வதேச எல்லையில் உள்ள அந்நாட்டு வீரர்களுக்கு இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் வாழ்த்து தெரிவித்தனர். பாகிஸ்தான் தனது 76வது சுதந்திர தினத்தை நேற்று கொண்டாடியது. இதை முன்னிட்டு, குஜராத்தின் கட்ச், பனஸ்கந்தா மற்றும் ராஜஸ்தானின் பார்மர் மாவட்டங்களில் உள்ள சர்வதேச எல்லையில் பணியாற்றும் இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து இனிப்புகளை பரிமாறி கொண்டனர்.

இது குறித்து எல்லை பாதுகாப்பு படையின் குஜராத் எல்லை பிரிவு செய்தி தொடர்பு அதிகாரி வெளியிட்ட அறிக்கையில், ‘இரு நாடுகளும் ஒப்புக்கொண்ட சர்வதேச எல்லையான குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள புஜ், ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மரில் உள்ள முனாபாவோ, கத்ரா, கெல்னோர், சோம்ரார், வர்னாகர் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய வீரர்கள், பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்து, இனிப்புகளை பரிமாறி கொண்டனர்,’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: