கடையை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளை

துரைப்பாக்கம்: பனையூர் ராஜிவ்காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (42). அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலையில் வழக்கம் போல கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கடையின் உள்ளே சென்று பார்த்த போது, வைத்திருந்த ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. கனாத்தூர் போலீசார்புகார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: