செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவு 8வது சுற்றில் பலம் வாய்ந்த அமெரிக்க அணியை நேற்று எதிர்கொண்ட இந்தியா-2 அணி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்று தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டது. இந்திய வீரர்கள் குகேஷ், சாத்வனி ரவுனக் வெற்றி பெற்று தலா 1 புள்ளிகள் பெற்ற நிலையில், பிரக்ஞானந்தா மற்றும் சரின் நிஹல் தங்கள் போட்டிகளை டிரா செய்து தலா அரை புள்ளி பெற்றனர். மற்றொரு ஓபன் பிரிவு 8வது சுற்றில் அர்மேனியாவுடன் மோதிய இந்தியா-1 அணி 1.5க்கு 2.5 என்ற புள்ளிக் கணக்கில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது.