கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா பாதிப்பு..!!

பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவர் வீட்டில் தனிமை படுத்திக்கொண்டார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்: லேசான அறிகுறிகளுடன் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருப்பவர்கள், தயவு செய்து உங்களை தனிமைப்படுத்திக் கொண்டு உங்களை பரிசோதனை செய்துகொள்ளுங்கள். மேலும், கொரோனா தொற்றால் எனது டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டது என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஏற்கனவே கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அப்போதும் அவர் தனது டுவிட்டரில் பதிவில்: எனது உடல் நிலை நலமாக உள்ளது. தற்போது வீட்டுத்தனிமையில் உள்ளேன். கர்நாடக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் ரைவரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கர்நாடக பாரதிய ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீலுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைபடுத்தி கொண்டுள்ளார் என அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

Related Stories: