பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவர் வீட்டில் தனிமை படுத்திக்கொண்டார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்: லேசான அறிகுறிகளுடன் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருப்பவர்கள், தயவு செய்து உங்களை தனிமைப்படுத்திக் கொண்டு உங்களை பரிசோதனை செய்துகொள்ளுங்கள். மேலும், கொரோனா தொற்றால் எனது டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டது என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.