புதுடெல்லி: நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அனைவரும் சமூக வலைதள பக்கத்தின் முகப்பு படமாக மூவர்ண கொடியை வைக்கும்படி பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார். இதனை அடுத்து பாஜ தலைவர்கள் தங்களின் சமூக வலைதளத்தின் முகப்பு படங்களை தேசியக்கொடியுடன் மாற்றினார்கள். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களின் சமூக வலைதளப்பக்கங்களிலும் மூவர்ணகொடி இடம்பெற்றுள்ளது. ஆனால், முன்னாள் பிரதமர் நேருவின் கையில் தேசியக்கொடி இருப்பது போன்ற புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.