புனே: மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத்தின் ஆதரவு எம்எல்ஏ கார் மீது கல் வீசி தாக்கியவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். சிவசேனா அதிருப்தி தலைவரும், முதல்வருமான ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவு எம்எல்ஏ உதய் சமந்த் என்பவர், புனே அடுத்த கட்ராஜ் சவுக் பகுதிக்கு காரில் சென்றார். அப்போது அவரது காரை நோக்கி சிலர் கற்களை வீசினர். அதனால் அவரது காரின் கண்ணாடிகள் உடைந்தது. அதிர்ஷ்டவசமாக உதய் சமந்த் காயமின்றி தப்பினார். எம்எல்ஏ கார் மீது தாக்குதல் நடத்தியவர்கள், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.