புளியங்குடி: புளியங்குடியில் பெரியார் குறித்து அவதூறு வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்ட பாஜ நிர்வாகி கைது செய்யப்பட்டார். சென்னையில் கடந்த 28ம்தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்கு பிரதமர் மோடி வந்திருந்தார். அப்போது அவரது வரவேற்பு பேனர்களில் சிலர் கரி பூசியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த பாஜ நிர்வாகி, ‘பெரியார் சிலைகளை அவதூறு செய்ய வேண்டும், சிலைகளை உடைக்க வேண்டும்’ என வீடியோ வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.