கொல்கத்தா: மேற்குவங்கத்தில் பிக்கப் வாகனத்தின் ஜெனரேட்டரில் இருந்து மின்சாரம் கசிவு ஏற்பட்டதால், அந்த வாகனத்தில் சென்ற 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்குவங்க மாநிலம் கூச் பெஹார் மாவட்டம் தார்லா பாலம் வழியாக நேற்றிரவு ஜல்பேஷ் நோக்கி ‘பிக்கப்’ வாகனம் சென்றது. இதில் 27 பேர் பயணம் சென்றனர். இந்த வாகனத்தின் பின்புறத்தில் வைக்கப்பட்டிருந்த டிஜே சிஸ்டத்தின் ஜெனரேட்டர் பொருத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் திடீரென மின்சாரம் தாக்கியதில் வாகனத்தில் இருந்த 10 பேர் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து மாதபங்கா கூடுதல் எஸ்பி அமித் வர்மா கூறுகையில், ‘வாகனத்தில் இருந்த ஜெனரேட்டரின் வயரிங் துண்டிப்பு காரணமாக பெஹார் பகுதியில் விபத்து நடந்துள்ளது. மின்கசிவு ஏற்பட்டவுடன் வாகனம் முழுவதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.