பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் சுடுகாடு பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக சங்கர் நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று அப்பகுதியை ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது, கைப்பையுடன் பைக்கில் வந்த 2 பேரை மடக்கி சோதனை செய்தபோது, 4 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.