சிறப்பு டிஜிபி மீது பாலியல் வழக்கில் அரசு தரப்பில் கூடுதலாக 2 வக்கீல்

விழுப்புரம்: கடந்த அதிமுக ஆட்சியில் பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அப்போதைய சட்ட ஒழுங்கு சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகியோர் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இந்த வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பில் மேலும் 2 வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழக அரசு விஜிலென்ஸ் முன்னாள் சட்ட ஆலோசகர் ரவிச்சந்திரன், உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் இளங்கோ ஆகியோரை நியமித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: