பஞ்பாப் தாதா கும்பல் கொலை மிரட்டல் எதிரொலி; சல்மான் கான் போலீஸ் கமிஷனரை சந்தித்தது ஏன்?.. துப்பாக்கி லைசென்ஸ் ேகட்டு விண்ணப்பித்ததாக தகவல்

மும்பை: பாலிவுட் தாதா கும்பலின் கொலை மிரட்டல் எதிரொலியால், துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு போலீஸ் கமிஷனரை சல்மான் கான் திடீரென  சந்திந்தார்.

பஞ்சாபி பாடகர் சித்து மூசே வாலா சுட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் சிறையில் உள்ள தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வழக்கில் இதுவரை பலரை கைது செய்த போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் இருவரை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். முன்னதாக சில வாரங்களுக்கு முன் பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம்கானுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்தது.

அதில், ‘சித்து மூசே வாலாவுக்கு ஏற்பட்ட கதியை சந்திப்பீர்கள்’ என்று எழுதப்பட்டிருந்தது. இந்த கடிதத்தின் பின்னணி என்னவென்றால், கடந்த 1998ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு சினிமா ஷூட்டிங்கிற்காக சென்ற சல்மான்கான், அங்குள்ள காட்டில் அரியவகை மான்களை சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது. அந்த மான், தாதா பிஷ்னோய் சமுதாயத்தின் புனித விலங்காக கருதப்படுவதால், சல்மானுக்கு எதிராக பிஷ்னோய் கும்பலிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் சல்மான் கானுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று மாலை மும்பை போலீஸ் கமிஷனர் விவேக் பன்சால்கரை அவரது அலுவலகத்தில்  சல்மான் கான் திடீரென சந்தித்தார். அதேபோல் சட்டம்- ஒழுங்கு இணை கமிஷனர் விஸ்வாஸ் நாங்ரேவையும் சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக அதிகாரிகளை சல்மான்கான் சந்தித்ததாக கூறப்பட்டாலும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவர் துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்தாகவும், தகுதிக்கான நேரடி விசாரணைக்கு ஆஜரானதாகவும் போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: