புதுக்கோட்டை: புதுக்கோட்டை போலீசில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய மோப்பநாய் ராக்கி இறந்ததையடுத்து 24 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.புதுக்கோட்டை மாவட்ட போலீசில் கடந்த 13 ஆண்டுகளாக ராக்கி என்ற துப்பறியும் மோப்ப நாய் பணியாற்றி வந்தது. இந்த துப்பறியும் ராக்கி நாய் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் பிரதமர், குடியரசு தலைவர் உள்ளிட்ட வி.ஐ.பி.கள் வரும்போது வெடிகுண்டு சோதனைகளில் ஈடுபட்டு வந்தது. மேலும் பல்வேறு வழக்குகளில் போலீசுக்கு உதவியாகவும், இந்த நாய் செயல்பட்டு வந்தது. கடந்த 13 ஆண்டுகளாக போலீசுக்கு உதவியாக இருந்த ராக்கி தற்போது டி.எஸ்.பி. ரேங்கில் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் ராக்கி ஓய்வு பெற்றது.